ஜனாதிபதி இல்லாத நாட்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம்? link


ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கையின் புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
மாலைதீவில் இருந்து அவர் சீசெல்ஸ் செல்வார் என்றும் ஜனாதிபதியின் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அவர் நாட்டில் இல்லாத காலப்பகுதியில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் கலவரங்களை ஏற்படுத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி பொலிவியா சென்றிருந்தவேளையிலே அளுத்கம, பேருவளை மற்றும் தர்ஹா நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts