பெளத்த மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட சதியே அழுத்கமை சம்பவம் - சந்திரிகா


அளுத்கம வன்முறை பெளத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட சதியாகும்.குறிப்பிட்ட் சிலர் குறுகிய சுய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பெளத்தத்தின் பெயரால் நிகழ்த்திய மிக மோசமான வன்முறையே இதுவென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம,பேருவளை கலவரங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மேற்படி பிரதேச மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கும் அவர்,தனி நபர்கள் சிலர் சட்டத்தைத் தம் கையிலெடுத்து அராஜகம் பண்ணியதைத் தடுக்க இயலாது போனதில் அதிகாரம் படைத்தவர்கள் தோல்வியைத் தழுவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை வாழ் சகலருக்கும் அரசியல்,சம பொருளாதாரம் உட்பட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

Comments

Popular Posts