வாழைச்சேனையில் நாய் உண்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு - படங்கள்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி தாமரைக் குளத்தில் இருந்து இன்று காலை சிசு ஒன்றின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.
பொலித்தின் பையில் சுற்றப்பட்ட நிலையில் குளத்திற்கு அருகில் சிசுவின் சடலம் காணப்பட்டுள்ளது.
நாய் உட்கொள்ளும்போது அந்த பொலித்தீன் பையினுள் சிசுவின் சடலம் இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இதன் போது சிசுவின் கால்பகுதியொன்று நாயினால் கடித்து துண்டாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள், வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல்
வழங்கியமையையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சிசுவின் சடலத்தினை
மீட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான விசாரைணகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனைப் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Comments