மகேந்திர சிங் தோனியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
மகேந்திர சிங் தோனியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு"விஷ்ணு போல தன்னை உருவகப்படுத்தி விளம்பரம் செய்ததால் தோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாகக் கூறி ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஒய். ஷ்யாம் சுந்தர் என்பவர் நீதிமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அனந்தபூர் நீதிமன்றம் மகேந்திர சிங் தோனியை நேரில் ஆஜராகுமாறு 3 முறை உத்தரவிட்டது. ஆனால் தோனி ஆஜராகவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தோனி ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments