ரமழான் தலைப்பிறை தென்பட்டுள்ளது, நாளை ரமழான் முதல் நோன்பு link

ramdan
புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை இன்று தென்பட்டுள்ளதால் நாளை முதல் ரமழான் நோன்பு ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு சார்பாக மௌலவி ரியாழ் சற்று முன்னர் அறிவிப்புச் செய்தார்.
இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் தலைப்பிறை கண்ட செய்தி ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிறைக்குழு இன்று அறிவித்தது.

Comments

Popular Posts