வதந்­தி­களை நம்­பாது சிங்­க­ள­வர்கள் பொறுமை காக்க வேண்டும் : ஞான­சார தேரர்


பொது­பல சேனா அமைப்பை நம்பும் நாட்­டுப்­பற்­றுள்ள சிங்­கள மக்கள் வதந்­தி­களை நம்­பாமல், பொறு­மை­யுடன் செயற்­பட வேண்டும். ஞான­சார தேரரைக் கைது செய்ய வேண்டும். பாதுகாப்புச் செய­லா­ளரின் பின்னால் நின்று செயற்­ப­டு­கின்றார் என கூச்­ச­லிடும் அமைச்­சர்­களும் எதிர்க்­கட்சித் தலைவர் உட்­பட எம்.பிக்­களும் இந்த சம்­ப­வத்தின் ஆரம்பம் என்ன? என்­பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று வேண்­டுகோள் விடுத்தார்.
கொழும்பு, கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­பல சேனா அமைப்பின் தலை­மை­ய­கத்தில் நேற்று மாலை நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்,
இலங்கை சர்­வ­தேச அழுத்­தத்­திற்கு முகம் கொடுத்­துள்ள இவ்­வே­ளையில் பௌத்­தர்கள் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். அமைச்­சர்கள் மக்­களைத் தூண்டி விடும் வகையில் பேசக் கூடாது.
நாடு முழு­வதும் பல்­வேறு வதந்­திகள் பரப்­பப்­ப­டு­கின்­றன. சமா­தா­னத்தை விரும்பும் மக்கள் வன்­மு­றையை ஒரு போதும் விரும்ப மாட்­டார்கள். அளுத்­கம, தர்கா நகர், பேரு­வளை சம்­ப­வங்­களின் உண்மைத் தன்மை அறி­யாமல் சில ஊட­கங்கள் பிழை­யான செய்­தி­களை வெளி­யிட்­டன. இதனால் சர்­வ­தேச ரீதியில் இலங்­கைக்கு அவப் பெயர் ஏற்­படும். அமைச்­சர்கள் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் உட்­பட எம்.பிக்கள் உண்­மையை உணர்ந்து ஆராய்ந்­த­றிந்து பேச வேண்டும்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் லண்டன் பி.பி.சி.க்கும் அல் - ஜஸீரா தொலைக்­காட்­சிக்கும் பொது­பல சேனா­அ­மைப்பின் மீது பழியை சுமத்தி இந்தப் பிரச்­சி­னையை சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தி­யுள்ளார். இதை நான் வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன். அமைச்­சர்கள் சிலரும் எதிர்க்­கட்சித் தலைவர் உட்­பட எம்.பிக்­களும் எம் மீது குற்­றத்தை சுமத்­தி­விட்டு தப்­பிக்க முயல்­கின்­றனர்.
போயா தின­மான 12 ஆம் திக­தி­யன்று இச்­சம்­பவம் ஆரம்­ப­மா­னது. பௌத்த தேர­ரொ­ருவர் தாக்­கப்­பட்டார். அப்­போது எந்த அமைச்­சர்­களும் இது குறித்து அலட்­டிக்­கொள்­ள­வில்லை. விடயம் பூதா­க­ர­மாக உரு­வெ­டுக்­கவும் அவர்கள் எம்­மீது குற்றம் சுமத்தி குளம்­பிய குட்­டையில் மீன் பிடிக்க முயற்­சிக்­கின்­றனர்.
அன்­றைய தினமே அந்தப் பௌத்த தேர­ரிடம் மன்­னிப்பு கோரி­யி­ருந்தால் இச்­சம்­பவம் இந்த நிலைக்கு வந்­தி­ருக்­காது. ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.ஒருவர் தனது இணை­யத்தில் புல­னாய்வுப் பிரி­வினர் இச்­சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இருப்­ப­தாக செய்தி வெளி­யிட்­டுள்ளார். இது அப்­பட்­ட­மான பொய்­யாகும்.தர்கா நகர் கூட்டம் முடி­வ­டைந்த பின்னர் நாம் அங்கு இருந்த போதே நாலா புறங்­க­ளி­லு­மி­ருந்து எம்மை நோக்கி கூச்­ச­லெ­ழுந்­தது. நாம் திரும்பி வரும் போது எம் மீது கற்கள் எறி­யப்­பட்­டன.
ஆனால், இப்­போது பொது­பல சேனா அமைப்பின் மீது பழி சுமத்­தப்­ப­டு­கின்­றது. மேலும் பதுளை, மாவ­னெல்ல போன்ற நக­ரங்­களில் ஊர்­வலம், கூட்­டங்­களை நடத்துவதற்கு
பொது பல சேனா அமைப்புக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையை பெற்றுள்ளனர். ஆனால் வேடிக்கை என்ன வென்றால் இந்த நகரங்களில் கூட்டங்களை நடத்த பொது பல சேனா அமைப்பு அனுமதி கோர வில்லை என அவர் தெரிவித்தார்.

Comments

Popular Posts