தர்ஹா நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாமல் ராஜபக்ஸ விஜயம்
அளுத்கம
– பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற இனவன்முறையின் போது
பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய
நாமல் ராஜபக்ஸ இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
வன்முறையால் அழிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளை நாமல்
ராஜபக்ஸ பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அப்பிரதேச பௌத்த
தேரரையும் சந்தித்து உரையாடியுள்ளார். அளுத்கம – பேருவளை – தர்காநகர்
பகுதிகளில் அண்டையில் இடம்பெற்ற இனவன்முறையினை அடுத்து நான்கு பேர்
பலியானதோடு நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல
தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் 20 பொலிஸ் குழுக்கள்
அமைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments